2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் பலியான ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 16 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் வாகன விபத்தொன்றில் பலியான ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  இந்நபர் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த வாகனம் மோதியிருக்கலாமெனவும் யாழ். பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X