2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களின் வீடுகளில் தாக்குதல்கள்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 17 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (ஜெ.டானியல்,ரஜனி)

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரின் வீடுகளில் நேற்று திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர்  கழிவு எண்ணெய் ஊற்றியதுடன், வீடுகளுக்கு கல்லுகளினால் வீசி தாக்குதல் மேற்கொண்டதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.

குடத்தனையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  மத்திய குழு உறுப்பினர் தங்கராசா காண்டீபனின் வீட்டிலும் நெல்லியடியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் எட்வேட் இராயப்பு ஆனந்தராஜாவின் வீட்டிலும் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் கதவுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .