2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் கோவில் பகுதியில் பொலிஸார் கண்காணிப்பு பணியில்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். நல்லூர் கோவில் பகுதியில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் இன்று வியாழக்கிழமை முதல் சிவில் உடையில் ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உதவிப் பரிசோதகர் எஸ்.குணசிங்க தெரிவித்தார்.

நல்லூர் பகுதியில் பக்தர்களின் தங்கநகைகள், கைப்பைகள் உள்ளிட்ட உடைமைகள் கொள்ளையிடப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தங்கநகைகளை கொள்ளையிட்டதாகத் தெரிவிக்கப்படும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளின் மூலம் பல கொள்ளையர்கள் தங்கநகைகளை கொள்ளையிடுவதற்காக யாழ். நல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடுகளை எடுத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உதவிப் பரிசோதகர் எஸ்.குணசிங்க குறிப்பிட்டார்.

எனவே, நல்லூர்ப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .