2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான இருவர் யாழ். மேல் நீதிமன்றினால் விடுதலை

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், ரஜனி)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளையைச் சேர்ந்த பாஸ்கரன் வனஜன் மற்றும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த பொன்னையா சிதம்பரநாதன் ஆகிய இருவருமே இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவார்.

இவர்களில் வனஜன் என்பவர் 18.05.2009 அன்றும், சிதம்பரநாதன் என்பவர் 17.05.2009 அன்றும் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இருவருக்கெதிராக போடப்பட்டிருந்த வழக்கு இன்று யாழ் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த இருவரையும் விடுதலை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .