2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'இந்திய இழுவை படகுகள் தெடர்பில் இலங்கை - இந்திய அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண்டும்'

Super User   / 2012 ஜூலை 30 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

இந்திய இழுவை படகுகள் தெடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வட கடல் வளங்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் ஏ.எமிலியாம் பிள்ளை வலியுறுத்தினார்.

வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்திய இழுவை படகுகள் வட கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வட கடல் வளத்தை அழிப்பது தொடர்பாக இந்திய மீனவர் தரப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை.

இந்திய அரசும் இலங்கை அரசும் ஆழ்கடல் மீன்பிடி இழுவை படகுகள் தொடர்பில் இதய சுத்தியுடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டு வட கடல் வளங்களை பாதுகாப்பதற்குரிய ந்டவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இனியும் காலம் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இழுவை படகுகள் விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் வட கடலின் வளங்கள் பாதுகாக்கப்படும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .