2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பாஷையூர் இறங்குதுறையை ஐ.ஓ.எம். அதிகாரிகள் பார்வை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


கடற்றொழில் திணைக்களத்தினால் புனரமைக்கப்படவுள்ள பாஷையூர் இறங்குதுறையை  சர்வதேச குடிபெயர்வு அமைப்பு (ஐ.ஓ.எம்.)
அதிகாரிகள் நேற்று  புதன்கிழமை நேரில்ச் சென்று பார்வையிட்டனர்.

சர்வதேச குடிபெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.)
50 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் பாஷையூர் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

இறங்குதுறை புனரமைப்பின் மூலம் மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பிலும் மீனவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர்.

2 வாரங்களுக்குள் இறங்குதுறையை புனரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இதேவேளை, சர்வதேச குடிபெயர்வு அமைப்பு (ஐ.ஓ.எம்.) அதிகாரிகள்  வலிகாமம் வடக்கு சேந்தான்குளம் பகுதிக்கும் வடமாராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் 25 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுவரும் ஜஸ் தொழிற்சாலையையும் சென்று பார்வையிட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .