2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயலால் வடபகுதி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைமை ஏற்படும்'

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

வடபகுதியின் கரையோரப் பகுதிகளில் இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவதால் மீனவர்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைமை  உருவாகலாம் என கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் யாழ். மாவட்ட சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை இன்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

வடமராட்சி கிழக்கு, நெடுந்தீவு, காரைநகர், சுழிபுரம், குருநகர் ஆகிய பகுதிகளின் கரையோரக் கடல்களில் இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள்,  வடபகுதி மீனவர்களின் வலைகளை அறுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவதாக மீனவர்கள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலும் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2 நாட்களாக இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும்  இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும்  அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்தபோதிலும், தீர்க்கமான பதில் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் குறுகிய காலத்தில் சட்டத்தை கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம்  எனவும் எமிலியாம்பிள்ளை குறிப்பிட்டார்.

வடபகுதி மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் ரோலர் படகுகளினால் அறுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்கள் குழப்பமான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .