2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வீதி விஸ்தரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழில் வீதி விஸ்தரிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களை இணைப்பதற்காகவும் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

கே.கே.எஸ் வீதியில் மனோகரா திரையரங்கு முதல் தபாற் கந்தோர் வரையான பிரதேசத்திற்குட்பட்ட இடங்களில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் 01ஆம் திகதி சனிக்கிழமையும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்;கிழமையும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாவற்குழி பிரதேசம், கோகிலாக்கண்டி, மறுவன்புலோ, தச்சந்தோப்பு, தனங்கிளப்பு ஆகிய இடங்களில் 01ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

புத்தூர், ஆவரங்கால், வீரமாணி, வாதரவத்தை ஆகிய இடங்களில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 03ஆம் திகதி திங்கட்க்கிழமை மற்றும் 05ஆம் திகதி புதன்;கிழமை மற்றும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அராலி பிரதேசத்தில் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 06ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .