2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். சிறைச்சாலையிலுள்ள தண்டனைக் கைதிகள் உறவினர்களை சந்திக்க அனுமதி: செனரத் பண்டார

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

கைதிகள் தினத்தை முன்னிட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகள் எதிர்வரும் 9ஆம் திகதி தமது உறவினர்களுடன் நேரடியாக சந்திப்பதற்கான விஷேட ஏற்பாடு ஒன்றை செய்துள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

செப்டெம்பர் 12ஆம் திகதி உலக கைதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்நாளில் சிறைச்சாலைகளில் இருக்கும் தண்டனைக் கைதிகள் தமது உறவினர்களுடன் உணவுகள் அருந்தி தமது உணர்வுகளை பகர்ந்து கொள்வதற்காக சிறைச்சாலை அமைச்சின் ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 9ஆம் திகதி மட்டுமே மேற்படி கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரடியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். சிறைச்சாலையில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இருக்கும் 20 கைதிகள் உறவினர்களை சந்திப்பதற்கு விரும்புவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .