2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் நூலகங்களுக்கு நூல்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 49 நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மாநகரசபை ஆணையாளர் க.பிரணவநாதன், யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகர் அ.காந்தலட்சுமி, இலங்கை ரெலிக்கொமின் யாழ்.பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவானந்தன், ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் சார்பில் அன்ரன் நல்லதம்பி, கொழும்பு பொது நூலகம் சார்பில் ஜீ.வருணி மற்றும் நூலகர்கள், நூலக உதவியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .