2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான 2 நாள் மாணவ தலைமைத்துவத் திறன் பயிற்சி இன்று வியாழக்கிழமை யாழ். தேசியக் கல்வியல் கல்லூரியில் ஆரம்பமாகியது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்தப் பயிற்சியில் வடமாகாணத்தைச் சேர்ந்த  400 மாணவர்கள்; கலந்துகொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,  உயர்தர மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சியை வலய மட்டத்தில் சகல பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும்
அவர் கூறினார்.

வடமாகாண பிரதம செயலாளர்  விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .