2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காக காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சுன்னாகம் மின் நிலையத்திற்கு வாகனங்களில் பொருட்களை கொண்டு வருவதற்காக  மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம்  தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 1ஆம் 2ஆம் 3ஆம் திகதிகளில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை இடைக்கிடையில் சுன்னாகம் - பலாலி  வீதியில் புன்னாலைக்கட்டுவன் முதல் பலாலி வரையிலும்  குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளிலும் மின்விநியோகம் தடைப்படும்.

1ஆம் 2ஆம் திகதிகளில் திருநெல்வேலி, பரமேஸ்வரா பிரதேசம், கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, கொன்வென்ட் பிரதேசம், யாழ் பிரதான வீதி, குருநகர், பாஸையூர் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் தடைப்படும்.

1ஆம் திகதி மந்திகை, சாரையடி, பருத்தித்துறை நகரப்பகுதியிலும் 2ஆம் திகதி தென்மராட்சி பூராகவும் மின்விநியோகம் தடைப்படும் எனவும் இலங்கை மின்சாரசபையின் யாழ். அலுவலகம் கூறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .