2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுக் கதவுகளை களற்றி எடுத்துச்செல்ல முற்பட்ட ஒருவர் பிடிபட்டார்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். கோண்டாவில் கிழக்கு, குமரகோட்டம் பகுதியில் ஆட்கள் அற்ற வீடு ஒன்றின் கதவுகளை களற்றி அவற்றை எடுத்துச்செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் அயலவர்களினால் பிடித்து கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மேற்படி வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பார்த்துக்கொள்ளுமாறு அயலவரிடம் கூறிவிட்டு ஒருவாரம் வெளியிடத்திற்குச் சென்றுள்ளார். இதனை அவதானித்த இந்த நபர் வியாழக்கிழமை மாலை மேற்படி வீட்டின் கதவுகளையும் கதவுகளுடன் பொருத்தப்பட்டிருந்த பினைச்சல்களையும் களற்றிக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளார்.

இந்த வேளையில் அயலவர் மேற்படி வீட்டுக்கு சென்றபோது கதவு திறந்துள்ளதையும் ஒருவர் உள்ளே ஒளிவதையும் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்;த நபர் பிடிக்கப்பட்டு  பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .