2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் பேரணி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி,எஸ்.கே.பிரசாத்)

இலங்கை பொலிஸின் 146ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் சிவில் பாதுகாப்பு குழுக்களும் யாழ். பொலிஸாரும் இணைந்து யாழ். நகரில் மாபெரும் பேரணி ஒன்றை இன்று சனிக்கிழமை நடத்தினர்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தலைமையில் இவ் ஊர்வலம் ஆஸ்பத்திரி வீதி ஊடாக கஸ்தூரியார் வீதியைச் சென்றடைந்து அங்கிருந்து பஸ் நிலையத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலையத்தினை வந்தடைந்தது.

பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் உள்ள ஐக்கியத்தை வெளிக்காட்டும் முகமாக இந்த பேரணி அமைந்துள்ளது இந்த பெரணியில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி, போன்ற பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் 'தொழிலை பாதுகாப்போம்' 'குற்றங்களை தடுப்போம்' 'டெங்கு நோயை ஒழிப்போம்', 'சிறுவர்களை பாதுகாப்போம் துஷ்பிரயோகங்களை ஒழிப்போம்' போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் எதிர்வரும் 03ஆம் திகதி நாடுபூராகவும் பொலிஸின் 146ஆவது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் ஆலயங்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலங்களில் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .