2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன: எரிக் பெரோர

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)

கடந்த காலங்களை விட யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. பொலிஸாரின் நடவடிக்கை காரணமாகவே இது குறைவடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இவர்களுக்கெதிரான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்;ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குடியோதையில் வாகனத்தை செலுத்துபவர்களினால் விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாகவும் சென்ற வாரம் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய சாரதிகள் 29பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஏ - 9 வீதியில் வாகனங்களின் போக்குவரத்தில் நெருக்கடியான நிலை காணப்படுகின்றது. வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருவதினால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களினாலும் உள்ளூரில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்களினாலும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது.

சாரதிகள் வாகனங்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கின்றார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு வாகனங்களை குறித்த வேகத்தை விட அதிகரித்த வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவதினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வீதி புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவதினால் வாகனத்தைச் செலுத்துபவர்கள் மிகவும் நிதானமாக அவதானமாகவும் வாகனத்தை செலுத்துமாறும் அவ்விதம் வாகனங்களைச் செலுத்துவதன் மூலம் பல உயிர்களைக் காப்பற்ற முடியும்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .