2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளுக்களுக்காக மின்தடை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (எஸ்.கே.பிரசாத்)
வீதி அகலிப்பு பணிகளுக்களுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர் அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின்  ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படைப்படும் என்று யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் அறித்துள்ளார்.

இதனடிப்படையில், காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை பளை வரையான தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மந்திகை, சாரையடி, தம்பசிட்டிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .