2025 ஜூன் 21, சனிக்கிழமை

தமக்குரிய பகுதியில் மற்றொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மீன்பிடிப்பதாக அலைமகள் கடற்றொழிலாளர்கள் சங்கம் மு

Super User   / 2012 செப்டெம்பர் 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர்கள்; கலங்கட்டி வலை மூலம் மீன்பிடித்தொழிலில்; ஈடுபடும் இடத்தில் மற்றொரு சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேசமூர்த்தியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அலைமகள் கடற்றொழிலாளர்கள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இப்பகுதியில் 35 வருடங்களாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் அலைமகள் கடற்றொழிலாளர் சங்கத்தின் இடத்தில் மற்றொரு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இதனால் சொந்த இடத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமது சங்கத்தின் மீனவர்கள், கடற்றொழிலுக்குச் செல்ல முடியாமலிருப்பதாகவும் அலைமகள் கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வட்டுக்கோட்டை பொலிஸாருடனும் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவம் கடற்றொழிலார்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அலைமகள் கடற்றொழிலார்கள் மேலும் தெரிவித்தனர்.                     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .