2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளுக்காக யாழில் மின்தடை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்,கே.பிரசாத்)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்படும் என்று யாழ் பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை பரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, பளை வரையான தென்மராட்சிப் பிரதேசம், சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும்.

அதேபோன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில், மருத்துவபீட பிரதேசம், திருநெல்வேலி பிரதேசம், யாழ் மாநகரசபைப் பகுதி, யாழ் பட்டணப்பகுதி, ஸ்ரான்லி வீதி, இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், அராலி, காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17.09.2012 ஆகிய தினங்களில் பண்டைத்தரிப்பு, சில்லாலை, நிச்சாமம், விளான், இளவாலை, மாதகல், சாந்தை, வடலியடைப்பு, இடும்பன் பிரதேசம், தொல்புரம், சுழிபுரம் ஆகிய இடங்களிலும் 19.09.2012 புதன்;கிழமை மற்றும் 21.09.2012 திகதிகளில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் நாவற்குழிப் பிரதேசம், கோகிலாக்கண்டி, மறவன்புலோ, தச்சந்தோப்பு, தனங்கிளப்பு ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்றும் பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .