2025 ஜூன் 21, சனிக்கிழமை

காந்தி கிராம வீதியை காப்பற் வீதியாக மாற்றுவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)

கோப்பாய் காந்தி கிராம வீதியை காப்பற் வீதியாக மாற்றித் தருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவை கோப்பாய் காந்தி கிராம மக்கள் இன்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, ஊரெழு, ஆச்சாரியார் வீதி, அரசடி அம்மன் வீதி பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் வீதியை தார் போட்டு செப்பனிட்டு தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் உரிய பதில்கள் கிடைக்கப்படாத பட்சத்தில்; அப்பகுதி மக்கள் இன்று அமைச்சரை நேரடியாக சந்தித்து வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

குறித்த வீதியால் பயணம் செய்வதில் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .