2025 ஜூன் 21, சனிக்கிழமை

சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 4ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பாக யாழ் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக்கலந்துரையாடலில்  யாழ் இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் கலந்து கொண்டு இக்கண்காடசி தொடர்பாகவும் இதில் பங்களிப்புச் செய்யவுள்ள இந்திய நிறுவனங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

கடந்த மூன்று ஆண்டு காலமாக சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு 40 தொடக்கம் 45 வரையான இந்திய நிறுவனங்கள் வருகை தந்துள்ளன. அடுத்த ஆண்டு 4 ஆவது வர்த்தக கண்காட்சி ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 20 திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் 50 இந்திய நிறுவனங்கள் வருகை தரவுள்ளன. இந்த 50 நிறுவனங்களிலும் எவ்வகையான நிறுவனங்கள் இங்கு வந்தால் இங்குள்ள வர்த்தக சமூகத்திற்கு பயனுடையதாக அமையும் என்று இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .