2025 ஜூன் 21, சனிக்கிழமை

த.தே.கூ.வினர் சட்டத்தை மதித்தனர்: டி.ஐ.ஜி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, கிரிசன்)

சட்டத்தினை மதித்து பாதைக்கு இடையூறு விளைவிக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடாத்தப்படும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆர்ப்;பாட்டங்கள் நடத்தும் போது ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்பவர்கள் பொலிஸாரின் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்கள், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தும் போது, போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்து இடையூறுகளை குறைப்பதற்காக ஆர்ப்பாட்ட பகுதிகளில் கடமையில் ஈடுபடுகின்றார்கள்.

ஆர்ப்பாட்டத்தினை நடத்துபவர்கள் சட்டத்தினை மதித்து அதற்கேற்ப நடக்க வேண்டும். அந்த வகையில், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டதை கண்டிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டமைப்பினர் சட்டத்தினை மதித்து ஆர்ப்பாட்டத்தினை ஒதுக்கு புறமாகவும், பாதைக்கு இடையூறு விளைவிக்காமலும் நடத்தினார்கள் அதனால் அன்றைய தினம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படவில்லை' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .