2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பொலிஸ் பாதுகாப்பிற்கு வேண்டுகோள் விடுத்தால் வழங்குவோம்: டி.ஜ.ஜி

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, கிரிசன்)

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்தால் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவோம் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அச் சந்திப்பின்போது, நல்லூர் பிரதேச சபை தவிசாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்கள் எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லை. தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் சந்தேக நபர்களை கைது செய்வோம் என்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .