2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லூர் பிரதேச சபை காணி விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)   

நல்லூர் பிரதேச சபையின் சிறுவர் பூங்காவிற்கான காணி விடயம் குறி;த்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பிரதேச சபையின் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் ஆவணங்களை தயார்ப்படுத்தி இன்று கொழும்பிற்கு சென்றவுடன் தனது வழக்கறிஞரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதேச சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கு உள்ளூராட்சி சட்டதிட்டத்தின் படி காணி உரித்தையும், பிரதேசத்தினை ஆளுகின்ற உரித்தினையும் நிலைநாட்டுவதற்கு இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு இந்த வாரத்தில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளதாகவும், இது ஒரு வகையான போராட்டம் இந்த போராட்டத்தினை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .