2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாற்றுவலுவு உடையோர்க்கான கட்டிட அமைப்பு தொடர்பில் பயிற்சி பட்டறை

Super User   / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மாற்றுவலுவுடையோர்க்கான கட்டிட அமைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறையும் செயலமர்வும் இன்று நடைபெற்றது.

 சமூக சேவைகள் அமைச்சு மற்றும் மாற்றுவலுவுடையோர்க்கான தேசிய செலயகம் ஆகியன இணைந்து நடாத்திய இந்த பயிற்சி பட்டறை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பொறிளியலாளர்கள் 104 பேர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் மாற்றுவலுவுடையோர்க்கான் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும் யாழ். மாவட்டத்தில் கட்டிட அமைப்புக்கள் குறைவடைந்து செல்கின்றன. அதற்காகவே பொறிளியலாளர்களிடம் விழப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற கட்டிட பொறிளியலாளர்களுக்காக இப்பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பட்டறையில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், மாற்றுவலுவுடையோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் எம்.டி.பி. யமன்னே உட்பட கட்டிட பொறிலியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .