2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பொதுமக்கள் தினத்தினால் மக்கள் பெரிதும் நன்மையடைகின்றனர்: யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் மக்கள் தினத்தில் யாழ். மாவட்ட பொது மக்கள் கலந்துகொள்வதுடன் தமது பிரச்சினைகளைக் கூறி உரிய தீர்வுகளையும் பெற்றுவருவதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரெரா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் குறிப்பிட்ட மக்கள் தினம் சம்பந்தமாக கேட்டபோதே இதனை குறிப்பிட்டார்.

ஒவ்வொரு புதன்கிழமையும் இடம்பெறும் பொதுமக்கள் தினத்தில் வட மாகாண பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றார்கள்.

இந்த நாளில் பொலிஸார் சம்பந்தமான குறைகள் இருந்தால் அதனை தமக்கு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக முறையிடலாம் எனவும் மற்றும் பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டும் நீண்ட நாட்களாகியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது சம்பந்தமாகவும் மற்றும் பொதுமக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் முறையிடலாம் எனவும் தெரிவித்துள்ளதுடன் - குறிப்பிட்ட தினத்தில் தம்மை சந்திக்கும் பொதுமக்களுக்கு வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் திருப்தியுடன் செல்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .