2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓய்வு

Super User   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ. குகநேசன் ஓய்வு பெறவுள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை யாழ். பொலிஸ் நிலையத்தில் அணி வகுப்பு மரியாதையும் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இவர் 37 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .