2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ்ஸில் தங்கநகை திருட்டு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (சுமித்தி)


தனியார் பஸ்ஸொன்றில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் களவுபோயுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த பஸ்ஸிலேயே இக்களவு இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

உறவினரொருவரிடம் இரவலாகப் பெற்ற தங்கநகைகளை அடைவு வைப்பதற்காக இப்பஸ்ஸில் அதனை எடுத்துச்சென்ற இணுவிலைச் சேர்ந்த பெண்ணொருவர்,  தங்கநகைகள் வைக்கப்பட்டிருந்த கைப்பையைக் காணவில்லையென கூச்சலிட்டுள்ளார். இந்நிலையில், பஸ் சாரதி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு பஸ்ஸைக் கொண்டுசென்றார்.

நகைகள் களவுபோனமை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,  இப்பெண் இணுவிலைச் சேர்ந்தவரென்பதால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவரிடம் கூறியதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரிடம் கேட்டபோது, நகை களவுபோனமை இதுவரையில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லையெனக் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .