2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். தனியார் பஸ்களில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தனியார் பஸ் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்க நகை அறுக்கப்பட்ட சம்வபம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த வரணி கச்சாய் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியே அறுக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபர் பஸ்ஸலில் இருந்த வேளை சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்த பென்டன் நிலத்தில் விழும்போது சங்கிலி அறுக்கப்பட்டதை உணர்ந்து கொண்ட பின்னர் பஸ் சாரதியிடம் தெரிவித்தாக சங்கிலி களவு கொடுத்த வயோதிபர் தெரிவித்தார்.

சம்பவத்தினை அறிந்த சாரதி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு பஸ்ஸினை கொண்டு சென்றுள்ளார்.
 
யாழ். பொலிஸ் நிலையத்தில் பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக, தொடர்ச்சியாக தங்க நகைகள் திருடப்படுவதும், அறுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வரகின்றமையால் பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் போது தங்க நகைகள் அணிவதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .