2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். கலாசார சீரழிவுகளை தடுக்க பொலிஸார் விசேட நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் நடைபெறும் கலாசாரச் சீரழிவுகளை தடுப்பதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.

யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்று வருகின்ற கலாசார சீரழிவுகள் தொடர்பில் யாழ் மாநகரசபை உறுப்பினரால் எழுத்து மூலம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் நகரின் முக்கிய பகுதிகளில் இடம்பெறும் கலாசார சீரழிவுகள் கண்காணிப்பதற்கு பொலிஸார் சிவில் உடையில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பேருந்து நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ் கோட்டை மற்றும் முனியப்பர் கோயில் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கலாசார சீரழிவகளை தடுப்பதற்கு விசேட கண்காணிப்பு நடவடிக்கை எற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .