2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பேதங்களின்றி சகலரும் நாட்டை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும்: எஸ்.எம்.சந்திரசேன

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

'இன மத பேதங்களின்றி அனைவரும் இந்த நாட்டை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும்' என்று கமநல சேவைகள் மற்றும் வன ஜீவராசிகள் பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை யாழ் கமநலசேவைத் திணைக்கத்தின் 50ஆவது ஆண்டு நிறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்தன. யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் அரசங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மாணவர்களின் கல்விக்கும் அரசு பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

இந்தச்ச சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தி இன, மத, மொழி பேதங்கள் இன்றி நாட்டைக்கட்டி எழுப்ப அனைவரும்  ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் சிறந்த கல்விமான்கள் பல அறிஞர்கள் இருந்திருக்கின்றார்கள் இன்று எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை இளய சமுதாயம் சரிவரப் பயன்படுத்தி சிறந்த கல்வியாளர்களாக, அறிஞர்களாக, பொறியியலாளர்களாக உருவாகி நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கமநல புலமைப்பரிசில் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 17 மாணவர்களுக்கு தலா 20,000 ரூபா வைப்பிலிடப்ப்பட்ட வங்கிப்புத்தகமும், தெரிவு செய்யப்பட்ட 7 விவசாயிகளுக்கு 4 நான்கு சக்கர உழவு இயந்திரமும் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .