2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'யாழில் கல்வித்தரம் உயர்வடைய படையினர் அயராது பாடுபடுகின்றனர்'

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்,சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் கல்வித்தரம் மேலும் உயர்வடைவதற்காக இங்குள்ள படையினர் அயராது பாடுபடுவதாக யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இது தொடர்பில் அவர்; வெளியிட்;டுள்ள ஆசிச் செய்தியிலேயே இவ்வாறு கூறினார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

யாழ். படைகளின் கட்டளைத் தளபதியென்ற வகையில் வெற்றி பெற்ற மாணவர்களை மனதாரப் பாரட்டுகின்றேன். வெற்றி பெற்ற மாணவர்கள் தமது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இப்போது உங்கள் மாணவப் பருவத்தில் முதல் வெற்றியை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எதிர்காலத்தில் உங்களின் கற்றல் செயற்பாட்டில் நீங்கள் பல சவால்களை சந்திப்பதற்கு நேரிடலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினர் உங்களுக்கு பக்கபலமாகவிருந்து உங்கள் கல்வியின் முன்னேற்றத்திற்கு பங்களி;ப்பார்களென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்' என்றார்.

இதேவேளை இங்கு உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,

"இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள  இலவசக் கல்வித் திட்டத்திஅ நாம் தலைசாய்க்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் பொதுக்கலை திட்டம் உலகிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு திட்டம் ஆகும்.  எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு இலங்கையில் 99 வீதமான வருமானங்கள் இலவச கல்வி திட்டத்திற்கு ஒதுக்கப்படுகின்றதென்பதை ஒவ்வொரு பிரஜையும் உணர வேண்டும்" என்றார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .