2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஜேர்மன் தூதரக அதிகாரிகள் யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தை பார்வையிட ஜேர்மன் தூதரக அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஏ௯ வீதி நெடுங்குளம் சந்தியில் கால்ப்பந்தாட்டப் பயிற்சி மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த மைதானமானது ஜேர்மன் தூதரகம் மற்றும் பீபா அமைப்பின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த மைதான வேலைகளின் நிலமை பற்றியும் அதன் தன்மை பற்றியும் ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட ஜேர்மன் தூதரக அதிகாரிகள் குழு எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளது. அன்று பிற்பகல் 4 மணியளவில் இந்தக்குழு மேற்படி மைதானத்தைப் பார்வையிடவுள்ளது.

அத்துடன் இந்த மைதானம் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .