2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலையில் நிலவும் ஊழியர் வெற்றிடங்கள் சுற்றுநிரூபத்திற்கமைய நிரப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். பல்கலைக்கழகத்தில் நிலவும் ஊழியர்  வெற்றிடங்களை நிரப்புவதற்கு நான் என்றும் தடையாக இருந்தவன் அல்ல. ஆனாலும் குறிப்பிட்ட வெற்றிடங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் சுற்றுநிரூபம் 876 இற்கு அமைய உண்மையாகவும் நேர்மையாகவும் நிரப்பப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது கணினி பிரயோகவியலாளர் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 43 பதவி வெற்றிடங்கள் உள்ளன. இதற்;கான புதியவர்களை நியமனம் செய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக பெயர்களை வழங்கியுள்ளேன். இந்த பெயர்ப்பட்டியலிலும் கூட,   நான் பல்கலைக்கழகத்தில் உள்ள வெற்றிடங்களிலும் பார்க்க மூன்று மடங்கானவர்களின் பெயர்ப்பட்டியல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளேன். திறமையானவர்களை தெரிவுசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பெயர்களை அனுப்பிவைத்துள்ளேன். இதில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய பெயர்களும் கூட அடங்கி இருக்கலாம்.

இந்த வகையில் நேர்மையாகவும் உண்மையாகவும் நேர்முகப் பரீட்சை வைத்து உரியவர்கள் ஊழியர்களாக  நியமனம் செய்யப்படவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையை மீறி பொதுவான விளம்பரத்தை செய்து பல்கலைக்கழகங்கள் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடியாது.

ஏன் பல்கலைக்கழகம் வெளிவாரியாக விளம்பரப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் விண்ணப்பங்களை வழங்கியது என்பது பற்றி தெரியவில்லை. தற்போது கூறுவதுபோன்று நான் யாருடைய தெரிவிலும் ஆர்வம் காட்டி இதனை தடுக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ், இளைஞர் யுவதிகள் அனைவரையும் எனது மக்களாகவே பார்க்கின்றேன்' என்றார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .