2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கூடங்குளம் விவகாரத்தில் தலையிடமுடியாது: சம்பிக்க

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

"கூடங்குளம் அனல் மின் நிலையம் அமைப்பது குறித்த விவகாரத்திலும் தலையிடமுடியாது. இந்தியாவில் நடைபெறும் போரட்டத்திலும் தலையிட முடியாது. அது சுதந்திர நாடு" என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற யாழ். மாவட்ட மின் பாவணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

யாழ். மாவட்டத்திற்கு தேசிய மின்வலைப்பின்னல் மூலம் இந்த ஆண்டு நிறைவிற்குள்  நூறு வீதம் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். யாழ்.மாவட்டத்திற்கு கிளிநொச்சியில் இருந்து லக்ஷ்ஷபான மின்சார இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், சுன்னாகத்தில் அனல் மின்சாரம் அமைக்கப்பட்டு வருகின்றது. வடபகுதியில் முழுமையாக மின்சாரத்தினை வழங்குவதற்கான உப நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மின்சாரம் வழங்குவதற்கு இரட்டை வழி அமைக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சியில் இருந்து சுன்னாகம் வரை தேசிய மின்வலை பின்னலூடாக மின்சாரம் வழங்குவதற்கு மின்சார உப நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
 
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சார வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களினால் மின்சாரம் கட்டுப்படுத்தப்படுகின்றது. தேசிய ரீதியாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு நாங்கள் தடைபோட முடியாது.

அத்துடன், இலங்கை மின்சார சபையில் தமிழ் ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்விரைவில் நிரப்பப்படும்.  மற்றும் பாடசாலைகளில்  கணினி  பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மின்சார சபையினால் கட்டணங்கள் அறவிடப்படாமல் இருப்பதற்கு நட்வடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது"  என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .