2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். கூட்டுறவு பணியாளர்களுக்கான கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 06 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட ஒன்றிணைந்த கூட்டுறவு கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தினால் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வீ.கே.அருந்தவநாதன் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நடத்தையும், குற்றங்களும் அதன் வகைகளும், கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்தார்.
 
அதனைத் தொடர்ந்து, குற்றப்பத்திரம் வழங்கல் விளக்கம் கோரல் நடைமுறைகள், 'காண்புகள், தண்டனையின் வகைகள், மேன்முறையீடு நடைமுறைகள் மேன்முறையீட்டு தீர்ப்பு போன்ற தொனிப்பொருள்களிலான கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன.

இக்கருத்தரங்கில் யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .