2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பட்டதாரி பயிலுநர்கள் எதிர்ப்பு

Super User   / 2012 நவம்பர் 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை பட்டதாரி பயிலுநர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த இவர்கள் கடந்த யூன் மாதம் பயிலுநர்களாக ஆட்சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு யாழ் மாவட்ட செயலாளார் சுந்தரம் அருமைநாயத்தினால் 25-06-2012 திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அன்று தொடக்கம் இவர்கள் யாழ் மாவட்டத்தில் பயிலுநர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைக்கு குறைவான பட்டதாரி பயிலுநர்கள் இருந்தமையினால் யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக உள்ள பட்டதாரிகளை கிளிநொச்சிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதனால் 160 பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தினால் கிளிநொச்சிக்கு அனுப்பட்டனர் அவர்களுக்கு கிளிநொச்சியில் கடந்த 06.11.2012 அன்றைய திகதியிடப்பட்ட நியமன கடிதங்கள் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரனினால் வழங்ப்பட்டது.

"ஆனால் அவர்கள் ஏற்கெனவே யாழ் மாவட்டத்தில் 25-06-2012 இலிருந்து பணியாற்றிய காலம் கவனத்தில் எடுக்ப்படாமல் தற்போது நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் போது புதிய திகதியிலிருந்தே பயிற்சி கால ;பணியினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் தங்களுக்கு யாழ் மாவட்;டத்திலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டு கிளிநொச்சியின் பல்வேறு பிரதேசங்களுக்கும் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு வழங்குகின்ற 10,000 ரூபா கொடுப்பனவினை கொண்டு இவ்வாறு நீண்ட தூரங்களுக்கு சென்று பணியாற்ற முடியாதுள்ளது"  எனவும் யாழ்பாணத்தில் பயிலுநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பட்டதாரிகளில் தாங்கள் எந்த அடிப்படையில் கிளிநொச்சி அனுப்பட்டோம் என்பது தொடர்பிலும் அதிருப்தி தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி தங்களது அதிருப்பதியை தெரிவித்து மாவட்ட செயலாளரை சந்திப்பதற்கு காத்திருந்தனர். எனினும் பட்டதாரிகளுடனான மாவட்ட செயலாளரின் சந்திப்பின் போது ஊடகவிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மாவட்ட மாவட்ட செயலாளர் ரூபர்வதி கேதீஸ்வரனை தொடர்புகொண்டு வினவிய போது,

"வழங்க்கப்பட்ட நியமன கடிதங்களிலுள்ள திகதி தொடர்பான பிரச்சினையை தீர்த்துகொள்ள முடியும். யாழ் மாவட்டத்ததில் இருந்து கிளிநொச்சி அனுப்பட்ட பட்டதாரிகள் ஏற்கெனவே யாழ் மாவட்டத்தில் கடமையாற்றியுள்ளனர் என்பது தொடர்பில் தமக்கு தெரியாது.

தற்போது யாழ் மாவட்ட செயலாளருடன் இது தொடர்பில் பேசி இந்த பட்டதாரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி மாற்றம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.ஆனால் பணிகளுக்காக வழங்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மாற்றம் எதுவும் மேற்கொள்ள முடியாது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அரச சேவையில் பயிலுநர்களாகவோ அல்லது நிரந்தரமாவோ ஆட்சேர்ப்பு செய்யும் போது அரசின் கொள்கைகளுக்கு அமைவாக அவர்கள் தேவையுள்ள இடங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர்". என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .