2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கோப்பாயில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்கே.பிரசாத்)


யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்; பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்கும் நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்பர் நிறுவனத்தின் அனுசரணையுடன் கோப்பாய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் சுமார் 400 வரையான மக்கள் கலந்துகொண்டு பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.

வடக்கு மாகாண உதவிப்பதிவாளர் நாயகம் ஆனந்தி கலந்துகொண்டு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை வழங்கினார்.

இந்த நடமாடும் சேவை தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாக்ளர் தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்டத்தில் அதிகளவான சனத்தொகையைக் கொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  பெருமளவான மக்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாதுள்ளனர். இதனால் இவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இவைகள் இல்லாததால் இந்த மக்களுக்கு கிடைக்கவேண்டிய சில சலுகைகள் கிடைக்காமல் போயுள்ளது. இந்த நிலையில், பிரதேச செயலகம் பதிவாளர் நாயத்தின் ஊடாக பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத நடுப்பகுதியில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .