2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

உடுவிலில் டெங்குநோய் தாக்கம் குறைந்துள்ளது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 23 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குள் டெங்குநோய் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உடுவில் பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிமனை எல்லைக்குள் கடந்த மாதம் 6 நோயாளிகள் இனம்காணப்பட்டபோதிலும்,  இந்த மாதம் ஒரு நோயாளி மட்டுமே இதுவரையில் இனம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

டெங்குநோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள் கிராம அலுவலர்கள், பொலிஸார், சுகாதாரத் தொண்டர்கள் எனப் பலரும் இனைந்து செயல்படுவதினால் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது.  கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பொதுமக்களுக்கிடையே காணப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் டெங்குநோயை கட்டுப்படுத்த முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .