2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

குரங்குக்கு வைத்த பட்டாசு வெடித்ததில் இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

குரங்குக்கு வைத்த பட்டாசு வெடித்ததில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். கொடிகாமம், மந்துவில் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த நடராசா நிகிந்தன் (வயது 20) மற்றும் இரத்தினம் தயாபரன் (வயது 20) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நடராசா நிகிந்தன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .