2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வேலணையில் கடத்தப்பட்டவர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி: டி.ஜ.ஜி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 23 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

வேலணை பகுதியில் கடத்தப்பட்டவர் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கடத்தப்பட்டவர் குறித்த தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், 'கடத்தப்பட்டதாக கூறப்படும் நபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு இருந்துள்ளது. நீதிமன்றினால் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும், இவர் மீது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு இருக்கின்றது' என்றார்.

இந்நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரை ஏன் கைது செய்யவில்லை? என்றும் கொழும்பு பொலிஸாரா அவரை கைது செய்தனர்? என்றும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், 'நீதிமன்றினால் பிறப்பிக்கப்ட்ட பிடியாணை குறித்து எமக்கு எதுவும் தெரியாது. அவர் கடத்தப்பட்டு விட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தான். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விடயம் தெரியவந்தது. அத்துடன், இவர் அண்மையில் தான் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்தது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .