2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். கோண்டாவிலில் ஒருவர் படுகொலை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். கோண்டாவில் நந்தாவில் அம்மான் கோவிலுக்கு அருகில் (இந்து மகா வித்தியாலயம் அருகில்) இன்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபரை துரத்தித் துரத்தி வெட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. உருக்குலைந்த நிலையிலான சடலம் தற்சமயம் யாழ். போதனா வைத்தியசாலையில் கோப்பாய் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடம்பு முழுவதும் வெட்டுக்காயங்களுடன் காணப்படும் குறித்த சடலம், 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவருடையதாக இருக்கலாம் எனவும் வைத்தியசாலையின் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையுண்டவரின் பெயர், விபரம் பற்றி இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்பிரிவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது...

“இன்று மாலை நந்தாவில் அம்மன் கோவிலுக்கருகில் காயங்களுடன் காணப்பட்ட நபரொருவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக மட்டுமே தமக்கு இதுவரை வாய்மூல தகவல் கிடைத்திருப்பதாகவும், மேலதிக விபரங்களை உடனடியாக அறியமுடியவில்லை” எனவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .