2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கருவாடு திருடிய சந்தேக நபர்கள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

கருவாட்டுக் கடை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள கருவாட்டுக் கடை ஒன்றிலேயே  அண்மையில் இந்த திருட்டு இடம்பெற்றது.

இந்த கருவாட்டுக் கடையிலிருந்து சுமார் 25,000 ரூபா பெறுமதியான  கருவாடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருட்டுப் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கருவாடுகளைத் திருடியதாகக் கருதப்படும் மூவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .