2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை நிர்வாகம் கோரினால் பொலிஸாரை அகற்றுவோம்: எஸ்.எஸ்.பி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது உயிர் ஆபத்துக்களையோ விளைவிக்கும் நோக்கில் பொலிஸாரை கடமையில் அமர்த்தவில்லை என்றும், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக்குப் பின்னர், அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாரை நீக்கக் கோரினால், பொலிஸாரை அங்கிருந்து நீக்குவோம்.

ஆனால், பொலிஸார் தொலைவில் இருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். இந்த பாதுகாப்பு மாணவர்களையும், அரச சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 07 December 2012 06:14 PM

    அப்படியென்றால் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ...??? போலிஸ் பாதுகாப்பு தமக்கு(மாணவர்களுக்கு) அவசியம் என்பதா????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .