2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'தொற்றுநோய் தொற்றாநோய் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்'

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

'யாழில் தொற்று நோய்களும் தொற்றா நோய்களும் தினமும் அதிகரித்து வருகின்றமையினால் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி நோய்கள் உருவாவதை தடுக்க வேண்டும்' என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா இன்று தெரிவித்தார்.

தேசிய சுகாதார வார நிகழ்வுகள் இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அனுசரணையில ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தேசிய சுகாதார வாரத்தில் 350இற்கு மேற்பட்ட பொது இடங்கள் அடையாளம் காணப்பட்டு டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிரமதான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

2013ஆம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து டெங்கினை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சுகாதார வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் பாரிய அளவில் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அவற்றிற்கான விழிப்புணர்வினை மக்களுக்கு சுகாதார பணியாளர்கள் ஏற்படுத்த வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மாவட்ட சுகாதார பணிமணையில் இருந்து துரையப்பா விளையாட்டு மைதானம் வரை நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். மொஹமட் ஜெவ்ரி உட்பட வைத்திய அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .