2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் நாளை பகிஷ்கரிப்பில் ஈடுபடமாட்டார்கள்

Super User   / 2012 டிசெம்பர் 10 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் நாளை பகிஷ்கரிப்பில் ஈடுபடமாட்டார்கள் என யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் மு.ரெமீடியஸ் தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் புதன்கிழமை சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் அசௌகரியங்களை நீக்கும் முகமாகவே இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவுக்கு எடுக்கப்பட்டது என சட்டத்தரணி ரெமீடியஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வட பகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவியுமான சாந்தா அபிமன்ன சிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .