2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கோண்டாவிலில் இளைஞன் கொலை; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தென்னிலங்கை இளைஞனின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஆகியோரும் குறித்த மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் போன்றோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன வடக்கில் உள்ள வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இளம் கணவன் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அவ்விருவருக்கு உணவு எடுத்துச் சென்ற மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரும் கைதாகியுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி நால்வரிடமும் பொலிஸார் தீவிர விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்...

கோண்டாவிலில் சடலமாக மீட்கப்பட்டவர் பதுளையைச் சேர்ந்தவர்

யாழ். கோண்டாவிலில் ஒருவர் படுகொலை

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .