2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வட மாகாணத்தில் சுற்றுலாதுறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வட மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாதுறை ஒன்றியத்தின் தலைவர் வை.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பில் இன்று சனிக்கிழமை யாழ். வர்த்தக சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணம் சுற்றுலா துறையில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது இந்த நாட்டில் நடைபெற்ற 30 வருட யுத்தத்தால் ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

இந்தப் பின்னடைவைப் போக்குவதற்கு வடக்கில் பல கவர்ச்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலா மையங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலா மையம் தொடர்பாக ஒரு பாடசாலை ஒன்றையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடமாகாண சுற்றுலா துறையில் முதலீடு செய்யவிரும்புபவர்கள் வட மாகாண சுற்றுலாதுறை ஒன்றியத்தினூடாக தொடர்புகளை மேற்கொண்டால் அதற்கான உதவிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .