2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பற்றைக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
அல்வாய் கிழக்கு மாயக்கை பகுதி பற்றைக் காணிக்குள் இருந்து காயங்களுடன் ஆணின் சடலம் நேற்று மாலை பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வி.எம் வீதியைச் சேர்ந்த குமாரசாமி கருணாநிதி (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதிக்கு மாடுகட்ட சென்ற நபர் ஒருவர் குறித்த சடலத்தினை  கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து, சடலத்தினை மீட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன் தயா சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .