2025 ஜூன் 18, புதன்கிழமை

கெற்பேலியில் இராணுவ முகாம் அமைக்க அனுமதி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 17 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான அனுமதியினை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக சுமார் 64 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
மேற்படி காணியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு இராணுவத்தினரால் கடந்த வருடத்தில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்காக அனுமதியினை ஆணைக்குழுவின் தலைவர் நிமல் வி.புஞ்சிஹேவா வழங்கியுள்ளார் என்று ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்படி காணியை இராணுவத்தினருக்கு வழங்குவதான அனுமதிக் கடிதம் கெற்பேலி கிராம அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கிராம அலுவலர் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் அவ்வதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .