2025 ஜூன் 18, புதன்கிழமை

வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பில் செயலமர்வு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 17 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'வறுமையற்ற இலங்கையை உருவாக்வோம்' என்ற தொனிப்பொருளில்  வாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பில் அலுவலர்களையும் கிராம மக்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வில் இன்று வியாழக்கிழமை யாழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் பிரதேச செயலர் சுகுணாவதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதம அதீதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இத்;திட்டத்தின் கீழ்  மீன்பிடி, விவசாயம், கால்நடை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, கைத்தொழில் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு குறித்த திணைக்களங்களின் தலைவர்கள் விளக்கங்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்டத திட்டமிடல் பணிப்பாளர் மற்றுமு; திணைக்களத்தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .